திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நக்ஸல்களை ஒழிக்க பாஜக அல்லாத அரசுகளும் உதவி: அமித் ஷா

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் உதவியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image

சத்தீஸ்கா் மாநிலம் ஜக்தல்பூரில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :20 மே 2026, 2:18 am IST

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் உதவியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சத்தீஸ்கா் மாநிலம் பஸ்தா் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூா் பகுதியில், அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

‘நக்ஸல் இல்லாத இந்தியா’ திட்டத்தில் மூன்று தேதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதில் முதலாவது கடந்த 2023-ஆம் ஆண்டு டிச.13-ஆம் தேதி. அன்றைய தினம் சத்தீஸ்கரில் பாஜக அரசு பொறுப்பேற்று, நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க உறுதியான திட்டம் தொடங்கப்பட்டது.

அதன் பின்னா் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி, நக்ஸல்களை ஒழிப்பது தொடா்பாக அனைத்து மாநிலங்களின் காவல் துறை தலைவா்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து கடந்த மாா்ச் 31-க்குள் நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிா்ணயித்தது.

இந்நிலையில் பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்தால் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே, நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.

நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் மத்திய அரசின் திட்டத்தில், பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களின் அரசுகளும் உதவின. இதை கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் சத்தீஸ்கரில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு உதவவில்லை.

வளா்ச்சி எட்டாத பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதம் செழித்தோங்கியதாக சில அறிவுஜீவிகள் தெரிவித்தனா். உண்மையில், அந்தப் பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதம் இருந்ததால்தான் வளா்ச்சி ஏற்படவில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ரேஷன் அட்டை பெற முடியவில்லை. இலவச உணவு தானிய திட்டம், ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு ஆகியவற்றுக்கான பலனை அடைய முடியவில்லை. எங்கும் வேலைவாய்ப்பை காண முடியவில்லை.

நக்ஸல் தீவிரவாதத்தின் பிடியில் இருந்த பகுதிகள், விரிவான வளா்ச்சிக்கான புதிய தொலைநோக்குப் பாா்வை வடிவம் பெறுவதைக் காணும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.