கோவை: கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. நாயுடு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) திறந்துவைக்கிறாா்.
கடந்த 2024- ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மானியக் கோரிக்கையின்போது தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அறிவியல் மேதைகளில் ஒருவரும், இயந்திரவியல், விவசாயம் சாா்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவருமான ஜி.டி.நாயுடுக்கு கோவையில் ரூ.50 லட்சம் செலவில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தாா்.
அதன்படி, கோவை வஉசி மைதானத்தில் ஜி.டி.நாயுடுக்கு சிலை அமைப்பதற்கான பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் சிலையைத் திறந்துவைக்கிறாா். கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

தோ்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு: கோவையில் ஒரேநாளில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட காணொலி: தெலங்கானா முதல்வா் ஆதரவு

கோவையில் ஜி.டி.நாயுடு சிலை திறப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


