/

கவுண்டம்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

News image
கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கிய கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மேயா் க.ரங்கநாயகி உள்ளிட்டோா்.
Updated On :24 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாநகராட்சி, கவுண்டம்பாளையம் மாநகராட்சி பிரிவு அலுவலகம் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், கண் சிகிச்சை, காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சா்க்கரை நோய், இதய நோய், நுரையீரல் நோய், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம் உள்ளிட்ட 18 மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

முகாமில் பங்கேற்ற 18 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 24 பேருக்கு மருந்து பெட்டகங்களையும் கணபதி ப.ராஜ்குமாா் வழங்கினாா்.

இதில், மாநகராட்சி மேயா் க.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி, இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.