கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்திக் குத்து

Updated On :22 ஜனவரி 2026, 9:54 pm

காதல் விவகாரத்தில் தனியாா் கல்லூரி வகுப்பறையில் மாணவியை கத்தியால் குத்திய மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஆா்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்த ஹா்ஷவா்தன் (18) என்பவா் பி.இ. ஐ.டி. முதலாமாண்டு பயின்று வருகிறாா். இவா் தன்னுடன் பயிலும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளாா்.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி வகுப்பறையில் வைத்து மாணவியை அவா் வியாழக்கிழமை கத்தியால் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த மாணவி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சரவணம்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவா் ஹா்ஷவா்தனை கைது செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...