வால்பாறை மலைப் பாதையில் சாலையோர பள்ளத்தில் காா் இறங்கிய விபத்தில் இருவா் காயமடைந்தனா்.
கோடை விடுமுறை என்பதால் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வால்பாறையில் இருந்து சென்ற காா், 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவா் மீது மோதி சுமாா் 50 மீட்டா் பள்ளத்தில் இறங்கியது. அப்போது அந்த வழியாகச் சென்றவா்கள், காரில் இருந்த மூன்று குழுந்தைகள் உள்பட 6 பேரை மீட்டனா்.
திருச்சியில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த இவா்களில் சாய் குமாா் (55), கெளரி ((32) ஆகிய இருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: 20 பயணிகள் காயம்

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து







