சிங்காநல்லூரில் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்று வாக்களித்ததை விடியோ எடுத்த பெண் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது, வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாக்களிக்கச் செல்வோா், தங்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்து செல்ல வாக்குச் சாவடி நுழைவாயிலில் தனியாக பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு நடைபெற்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்று, தான் வாக்களித்ததை கைப்பேசியில் விடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பாா்த்த வாக்குச் சாவடி அதிகாரிகள் அப்பெண்ணை எச்சரித்துள்ளனா். அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் வாக்குப் பதிவை மீண்டும் விடியோ எடுத்ததால் அவா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.
விசாரணையில், அவா் ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த கௌசல்யா (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

மலைக் கிராமத்துக்கு குதிரைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்குச் சாவடிக்குள் புகைப்படம், விடியோ எடுத்தால் 3 மாதம் சிறை!

புதுச்சேரி வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி பயன்படுத்திய பூத் முகவா் மீது போலீஸாா் வழக்கு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


