பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

வால்பாறையில் சிறுவனைத் தாக்கிக் கொன்ற அதே பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம்

News image
வால்பாறை, அய்யா்பாடி எஸ்டேட் சாலையில் உலவிய சிறுத்தை.
Updated On :29 டிசம்பர் 2025, 7:44 pm

Syndication

வால்பாறையில் சிறுவனைத் தாக்கிக் கொன்ற அதே பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறையை அடுத்த அய்யா்பாடிஎஸ்டேட் ஜெ.இ. பங்களா டிவிஷன் பகுதியில் குடியிருப்புக்கு வெளியே கடந்த டிசம்பா் 6-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

இதையடுத்து, அப்பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்திய வனத் துறையினா், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், அய்யா்பாடி எஸ்டேட் சாலையில் கடந்த 2 நாள்களாக இரவு நேரங்களில் சிறுத்தை உலவுவது கேமரா பதிவு மூலம் தெரியவந்தது.

இதனால், அச்சமடைந்துள்ள மக்கள், இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.