நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

கோவை, ஜூன் 14: கேரள மாநில எல்லைகளையொட்டி உள்ள தமிழகப் பகுதிகளில் அரிசிக் கடத்தலைத் தடுக்க போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் தேவையான உள்கட்டமைப்பும், பணியாளர்களும் இல்லாததால், ர

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:50 pm

ஆர். ஆதித்தன்

கோவை, ஜூன் 14: கேரள மாநில எல்லைகளையொட்டி உள்ள தமிழகப் பகுதிகளில் அரிசிக் கடத்தலைத் தடுக்க போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் தேவையான உள்கட்டமைப்பும், பணியாளர்களும் இல்லாததால், ரேஷன் அரிசிக் கடத்தலை முழுமையாகத் தடுக்க முடியாமல் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் தவிக்கின்றனர்.

 ÷ரேஷன் அரிசிக் கடத்தலை 100 சதவிகிதம் முற்றிலும் தடுக்க வேண்டும் என்று தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, உணவுக் கடத்தல் பிரிவு போலீஸôர் ஈடுபட்டு வருகின்றனர்.

 ÷அதேநேரத்தில் வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் போலீஸ் உதவியிருந்தால் தான் முழு அளவில் கடத்தலைத் தடுக்க முடியும் என்று உணவுக் கடத்தல் பிரிவு போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

 ÷கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம், போலீஸ் கெடுபிடிகளை எல்லாம் தாண்டி முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள எல்லையை ஒட்டியுள்ள வாளையார், வேலாந்தாவளம் ஆகிய சோதனைச் சாவடிகளில் சிக்கும் அரிசிக் கடத்தல் வாகனங்கள் பெரும்பாலும் மதுரை, பழனி, திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனுப்பப்படுவது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கிடங்குகளில் இருந்து நேரடியாக அரிசியை ஏற்றி வரக்கூடும் என்ற சந்தேகம் வலுக்கிறது.

 அதிகாரமில்லாத உணவுக் கடத்தல் பிரிவு போலீஸ்:

 அதேநேரத்தில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளில் நேரடியாக சோதனையிடும் அதிகாரம் உணவுக் கடத்தல் பிரிவு போலீஸýக்கு இல்லை.

 ÷அரிசி ஏற்றி வரும் வழியிலேயே ரகசியத் தகவலின்பேரில் லாரியை மடக்கி பிடிக்க வேண்டி உள்ளது. வருவாய்த்துறையில் உள்ள சிலரே அரிசிக் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதால், முழு அளவில் கடத்தலைத் தடுக்க முடியவில்லை.

 ÷கேரளாவில் நல்ல விலை கிடைப்பதால், ரேஷன் அரிசி கடத்துவது ஒருங்கிணைந்த நெட்வொர்க்காக நடந்து வருகிறது.

 ÷கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் போலீஸ் எங்கு வந்து கொண்டிருக்கிறார், எந்த எண் கொண்ட வண்டியில் வருகிறார் என்பது வரைக்கும் தகவல் சொல்ல சம்பளத்துக்கு ஆள்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், கடத்தல் சம்பவத்தை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை.

 ÷மேலும் ரேஷன் அரிசி கடத்தி வரும் லாரியை, போலீஸ் கண்ணில் சிக்காமல் கேரள எல்லை வரை கொண்டு சேர்க்கும் நபர்களுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை சம்பளம் கொடுக்கின்றனர். இதனால் போலீஸýக்கு தகவல் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை.

 ÷முழு அளவில் கடத்தலைத் தடுக்க வேண்டுமெனில், வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் போலீஸôரின் உதவி இருந்தால்தான் சாத்தியமாகும் என்று உணவுக் கடத்தல் பிரிவு போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

 கோவையில் குறுக்கு வழிகள்:

 கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் அரிசிக் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட உணவுக் கடத்தல் பிரிவு போலீஸôர் செயல்பட்டு வருகின்றனர்.

 ÷இந்தப் பிரிவில் இப்போது ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 காவலர்கள் என மொத்தம் 13 பேர் மட்டுமே உள்ளனர்.

 ÷ஒட்டுமொத்த நீலகிரி மாவட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஒரு போலீஸ்காரர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு அலுவலக வசதியும் கிடையாது.

 ÷அதேபோல பொள்ளாச்சி பகுதியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீஸôர் பணியில் உள்ளனர். கிணத்துக்கடவு முதல் கேரள எல்லையான செம்மனாம்பதி வரையிலான பகுதியை இந்த நான்கு பேர் மட்டுமே கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 ÷மொத்தம் உள்ள 17 வழித்தடங்களில் சுமார் 6 இடங்களில் மட்டுமே சோதனைச்

 சாவடி உள்ளது. மீதியுள்ள வழித்தடங்களில் எப்போது வேண்டுமானாலும் லாரிகள் செல்லலாம். அங்கு கண்காணிக்க ஆட்களே இல்லை என்பதால், கடத்தல்காரர்கள் எளிதாக இந்த வழித்தடங்களைப் பயன்படுத்துகின்றனர்.

 ÷கோவையில் வாளையார், வேலாந்தாவளம் ஆகிய இரு சோதனைச் சாவடிகளைத் தவிர்த்து, கேரள எல்லைக்குள் செல்ல பல குறுக்கு வழிகள் உள்ளன.

 இவை அனைத்தையும் சிறிய தனிப்படை கொண்ட உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸôரால் கண்காணிப்பது இயலாத விஷயம் என்று, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் கவலை தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.