வாடகை ஏதுமின்றி இலவசமாக இயங்கி வந்தாலும், 6 பேர் மட்டுமே அமரும் இடவசதி, போதிய வெளிச்சமின்மை, பேருந்து நிலைய சிறுநீர் கழிப்பிட துர்நாற்றம் போன்றவற்றால் வாசகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. நாள்தோறும் சுமார் 40 பேர் வந்து செல்லும் இந் நூலகத்தில் 3 ஆயிரத்து 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 20 ஆயிரம் புத்தகங்கள், 12 மாத, வார இதழ்கள், 10-க்கும் மேற்பட்ட நாளிதழ்களுடன் செயல்படும் நூலகம், மிகப் பழமையான ஒடுகள் வேய்ந்த கட்டடம் என்பதால் புத்தகங்களுக்கு மட்டுமல்ல, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை. புத்தகங்களையும், நாளிதழ்களையும் பாதுகாத்து வைக்கவும் இந்நூலகத்தில் இடமில்லை.