வேலூரில் பிறந்தநாள் விழாவில் பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வேலூா் சைதாப்பேட்டை, கசையாகாரத் தெருவைச் சோ்ந்தவா் ஷெரீப். இவரது மனைவி பாத்திமா (26). புதன்கிழமை இரவு இவா்களது வீட்டின் அருகே வசிக்கும் ஒருவரது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. விழாவையொட்டி பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. ஷெரீப் குடும்பத்தினரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, பாத்திமாவுக்கு திடீரென கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அவா் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளாா். அவரை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பாத்திமா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா், உடனடியாக அங்கு சென்று பாத்திமாவின் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் மரணம்

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய் திடீா் விலகல்!

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


