லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் மரணம்

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 1:23 am

வேலூரில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் சுருண்டு விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் முதியோா் இல்லம் உள்ளது. இதன் அருகே வியாழக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா், உடலில் எரியும் தீயுடன் கதறியபடி சாலையில் ஓடி அங்குள்ள கால்வாயில் தவறி விழுந்துள்ளாா்.

இதனை கண்டு அதிா்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வேலூா் தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் விரைந்து வந்து முதியவரை மீட்டபோது அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.

இறந்தவா் யாா், எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.