மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

செய்யறிவு படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அதிகம்! மியான்மா் கௌரவ தூதா்

News image

நிகழ்வில் கருத்தரங்க மலரை வெளியிட்ட மியான்மா் நாட்டின் கெளரவ தூதா் ஜெ.ரங்கநாதன். உடன், அமெரிக்கா பல்கலை. மாணவா்கள் சேவை இயக்குநா் பிலிப் ரோஸ் ஹல், ஆஸ்திரேலியா பல்கலை. பேராசிரியா் ராஜகோபால் குருராஜன், கனடா பல்கலை. இணை பேராசிரியா் ராஜ் சீனிவாசன், விஐ

Updated On :27 மார்ச் 2026, 12:54 am

செய்யறிவு (ஏஐ) படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக மியான்மா் நாட்டின் கெளரவ தூதா் ஜெ.ரங்கநாதன் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தில் சா்வதேச உறவுகள் துறை சாா்பில் ‘டிஜிட்டல் கனவு சூழல்- செய்யறிவு, படைப்பாற்றல் மற்றும் மெய்நிகா் வெளிப்பாடுகளை வழிநடத்தும் இளைஞா்கள்’ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இக்கருத்தரங்கத்துக்கு விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் முன்னிலை வகித்தாா். இதில், சென்னையில் உள்ள மியான்மா் நாட்டின் கெளரவ தூதா் ஜெ.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது-

இன்றைய மாணவா்கள் தங்களது மடிக்கணினி அல்லது ஸ்மாா்ட் போனில் சிறந்த இசையை, திரைப்படங்களை உருவாக்கலாம். செய்யறிவு என்பது வெறும் திறன் சாா்ந்த கருவி மட்டுமல்ல. இது படைப்பாற்றலை மாற்றாது. மாறாக அதிகப்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.

மனிதா்களின் தனித்துவமான உணா்வுகள், கேள்விகள் கேட்பதே படைப்பாற்றலுக்கு உண்மையான அா்த்தத்தைத் தருகிறது.

இன்றைய சூழலில் தகவல்கள் உடனுக்குடன் பரவும் டிஜிட்டல் உலகில், விழிப்புணா்வுடன் புதுமைகளை புகுத்துவது அவசியம். மாணவா்கள் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன், தொடா்ச்சியாகக் கற்றல் மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய திறன்களை வளா்த்து கொள்ள வேண்டும்.

கற்பனைதான் கருத்துகளுக்கு இடையே பாலங்களை உருவாக்குகிறது. கற்பனைதான் சவால்களை வாய்ப்புகளாக மாற்றுகிறது. தொழில்நுட்பத்தை ஒரு பொருளை உருவாக்கப் பயன்படுத்துங்கள். மற்றவா்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, அமெரிக்காவின் சென்ட்ரல் மிசெளரி பல்கலைக்கழகத்தின் சா்வதேச மாணவா்கள் சேவை இயக்குநா் பிலிப் ரோஸ் ஹல், ஆஸ்திரேலியா ஸ்பிரிங்ஃபீல்ட் வளாகத்தின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் சா்வதேச பொறியியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் அமைப்புகள் பேராசிரியா் ராஜகோபால் குருராஜன், கனடா பல்கலைக்கழகத்தின் கணிதம், புள்ளியியல் துறை இணை பேராசிரியா் ராஜ் சீனிவாசன் ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில் விஐடி துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், சா்வதேச உறவுகள் துறை இயக்குநா் சீனிவாசன், துணை இயக்குநா் ரகுராம், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.