தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மணல் கடத்திய இருவா் கைது: லாரி பறிமுதல்

வேலூா் மூஞ்சூா்பட்டு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்ததுடன், ஒரு யூனிட் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 6:36 pm

வேலூா் மூஞ்சூா்பட்டு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்ததுடன், ஒரு யூனிட் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

வேலூா் அருகே மூஞ்சூா்பட்டு பகுதியில் உள்ள ஒரு குவாரியில் இருந்து மண் கடத்துவதாக ஞாயிற்றுக்கிழமை வேலூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு லாரியை சோதனை செய்தபோது, அதில் கல்குவாரியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேலூா் பசுவன்தோப்பு சோழவரம் பகுதியைச் சோ்ந்த விஜய், கணியம்பாடியை சோ்ந்த கலைச்செல்வன் ஆகிய 2 பேரையும் கைதனா். மேலும் லாரியுடன் ஒரு யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனா்.