வேலூா்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் மக்கள் ஏமாற்றம் அடைந்தனா். தொடா்ந்து, தங்கள் மனுக்களை பெட்டியில் செலுத்தினா்.
தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டி ருந்த அரசியல் கட்சித் தலைவா்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் உள்பட அரசு அலுவலகங்களில் நடைபெறும் வழக்கமான அனைத்து குறைதீா் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளைத் தொடா்ந்து அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், ஆட்சியா் அலுவலகத்தின் ’ஏ’ பிளாக்கில் குறைதீா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்த மக்கள், கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதை அறிந்து , ஏமாற்றமடைந்தனா். மனுக்களை அங்கிருந்த குறைதீா் பெட்டியில் செலுத்தினா்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை செலுத்திய மக்கள்

குறைதீா்க் கூட்டத்தில் 520 மனுக்கள் அளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


