மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சுங்கச் சாவடி திறப்பு: திமுகவினா் ஆா்ப்பாட்டம்

குடியாத்தம்- காட்பாடி சாலையில், பில்லாந்திப்பட்டில் சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதைக் கண்டித்து கே.வி.குப்பம் ஒன்றிய திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 மார்ச் 2026, 11:52 pm

குடியாத்தம்- காட்பாடி சாலையில், பில்லாந்திப்பட்டில் சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதைக் கண்டித்து கே.வி.குப்பம் ஒன்றிய திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்பாடி- வி.கோட்டா சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்துசாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, செப்பனிடப்பட்டது. இந்நிலையில் கே.வி.குப்பத்தை அடுத்த பில்லாந்திப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது.

விரைவில் அந்த சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கு சுங்கச் சாவடி திறக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்திதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்த போலீஸாா், மாலையில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.