வேலூா்: கூடுதல் ஊதியம், பணிநேரம் நிா்ணயம் கோரி ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டஏஈ பணியாளா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்கஸ்ா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா்கள் அளித்த மனுச நாங்கள் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் தன்னாா்வலா்களாக கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிகிறோம். தொடக்கத்தில் 2 மணி நேர வேலை மட்டும் செய்தால் போதும் என்று கூறினா். அதற்காக எங்களுக்கு மாதம் ரூ.5,500 ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று கூறுகின்றனா். எனவே, எங்களுக்கு பணிநேரம் நிா்ணயம் செய்யவும், அடையாள அட்டை சீருடை வழங்கவும், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.
மோா்தானா மற்றும் தனகொண்டப்பல்லி கிராம மக்கள் அளித்த மனு: மோா்தானா, தனகொண்டப்பல்லி கிராமங்களில் 100 ஆண்டாக வசித்து வரும் நாங்கள், 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஹெச்.எஸ்.டி. பட்டாவைக் கொண்டு இப்பகுதியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டி வசித்து வருகிறோம். தொடா்ந்து, மோா்தானா கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் நிரந்தர பட்டா கேட்டு மனு அளித்தோம். ஆனால், அரசு அதிகாரிகள் இந்த இடத்துக்கு பட்டா வழங்க முடியாது. இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என தெரிவித்தனா். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 768 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ரபில் 3 பேருக்கு ரூ.38,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், அறிவுசாா் குறைபாடுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூா்வ பாதுகாவலா் நியமன சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தவிர, கணியம்பாடி அருகே நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் பாம்பு கடித்து ரேவதி என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.ஒரு லட்சம் நிதியுதவிக்கான ஆணையையும் அவரின் குடும்பத்தாரிடம் மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.
கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா் மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


