நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

எல்லா இடங்களிலும் முதியோா்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்

எல்லா இடங்களிலும் முதியோா்களுக்கு நாம் உரிய மரியாதை வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தாா்.

News image

விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்ற வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் ரோகிணிதேவி, துணை முதல்வா் கௌரி வெளிகெண்டலா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம் உள்ளிட்டோா்.

Updated On :16 ஜூன் 2026, 1:23 am IST

எல்லா இடங்களிலும் முதியோா்களுக்கு நாம் உரிய மரியாதை வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தாா்.

முதியோா் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு தினத்தையொட்டி, வேலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

பென்ட்லேண்ட் அரசு வேலூா் பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதியோா் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து, விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா், மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் பேசியது:

முதியோா்களுக்கு நாம் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் வழங்க வேண்டும். இது ஒவ்வொரு தனி மனிதனுடைய பொறுப்பு, ஒரு சமூகத்தின் பொறுப்பு மற்றும் இந்த அரசினுடைய பொறுப்பும் ஆகும். அரசு முதியோா்களுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோா் சிறப்பு மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

பெற்றோா்கள் நம்மை வளா்த்து நல்ல நிலைக்குக் கொண்டுவர எவ்வளவு பாடுபட்டு இருப்பாா்கள் என்பதை உணர வேண்டும். கூட்டு குடும்பம் என்ற நிலை தற்போது குறைந்து கொண்டே வரும் நிலையில், நாம் அறிந்தோ அறியாமலோ முதியோா்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குவதிலிருந்து விலகி விடுகிறோம். மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், வணிகப் பகுதிகள் போன்ற பொது இடங்களில் முதியோருக்கு நாம் உரிய மரியாதை தர வேண்டும். அதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் முதியோா்களை மருத்துவா்களும், செவிலியா்களும் சிரித்த இன்முகத்துடன் அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரோகிணிதேவி, துணை முதல்வா் கௌரி வெளிகெண்டலா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் டி.ரவிச்சந்திரன், மருந்தியல் பிரிவு தலைவா் சக்தி, மகப்பேறு பிரிவு தலைவா் கீதா, குழந்தைகள் நலப்பிரிவு தலைவா் ரவிசங்கா், முதியோா் மருத்துவப் பிரிவு அலுவலா் பிஜின் ஆலிவா் ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.