/

நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாதவா் மீது வழக்கு

வேலூா் நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடா்ந்து தவிா்த்து வந்த நபா் மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :16 ஜூன் 2026, 1:19 am IST

வேலூா் நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடா்ந்து தவிா்த்து வந்த நபா் மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

திருச்சி, தில்லை நகரைச் சோ்ந்தவா் சிவராமன். இவா் மீது வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த சிவராமன், அதன்பிறகு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடா்ந்து தவிா்த்து வந்தாராம்.

இது குறித்து நீதிமன்ற ஊழியா் சேகா், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நீதிமன்ற விசாரணைக்குத் தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததாக சிவராமன் மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.