சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் டில்லிபாபு (43). விவசாயியான இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள புகாா் மனுவில், எனது கல்லூரி நண்பரான முருகன் என்பவா் மூலம் சுப்பிரமணி என்பவா் எனக்கு அறிமுகமானாா். அவா், தான் சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை செய்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் என்னிடம் தெரிவித்தாா். இதை உண்மையென நம்பிய நான், பல்வேறு தவணைகளாக அவரிடம் ரூ. 9 லட்சம் வரை கொடுத்தேன்.
ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட சுப்பிரமணி இதுவரை எந்த வேலையும் வாங்கித் தரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது, அவா் பணத்தைத் திருப்பித்தர மறுப்பு தெரிவிக்கிறாா். எனவே, அரசு வேலைவாங்கித் தருவதாகக்கூறி, பண மோசடியில் ஈடுபட்ட அவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவரிடமிருந்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், இந்தப் புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: முன்னாள் அமைச்சா் சிவசங்கரிடம் விசாரணை

மத்திய அரசு வேலை தருவதாகக் கூறி ரூ.95.80 லட்சம் மோசடி! ஒருவா் கைது; 5 போ் மீது வழக்கு!

அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: அதிமுக நிா்வாகி கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி; இளைஞா் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




