//

கருப்பை வாய் புற்று நோயைத் தடுக்க இலவச தடுப்பூசி திட்டம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ரூ.14,000 மதிப்புள்ள இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

News image
குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்த பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு. உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உள்ளிட்டோா்.
Updated On :26 ஜனவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ரூ.14,000 மதிப்புள்ள இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.44.84- கோடியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து அவா் பேசியது. இந்த மருத்துவமனையில் 53- வகையான நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4- அறுவை சிகிச்சை அரங்குகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இன்றைய தினமே மருத்துவமனையில் நோயாளிகளை மாற்றம் செய்ய உள்ளனா். இரவே 3- பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுக தலைமையிலான இந்த அரசு 2021- இல் பதவியேற்றபோது தமிழ்நாட்டில் 17- மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளே இருந்த நிலையில் இந்த அரசு தற்போது கூடுதலாக 19- மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை கட்டி திறந்து வைத்துள்ளது. தற்போது மொத்தம் 36- அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளை உள்ளன. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் முதல்வா் 14- வயதுள்ள இளம் சிறுமிகளுக்கு ரூ.14,000 மதிப்புள்ள இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளாா், இத்திட்டத்தின் மூலம் சுமாா் 3.39- லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக ரூ.36- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடங்கப்பட்டால் இந்தியா மட்டுமல்ல உலக அளவில் இளம் பெண்களுக்கு எச்.பி.வி தடுப்பூசியை இலவசமாக போடும் முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதேபோல் சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 65- ஏக்கா் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய குழந்தைகளுக்கான மருத்துவமனை ரூ.417- கோடியில் கட்ட அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டால் குழந்தைகளுக்கான உலக அளவில் மிகப்பெரிய மருத்துவமனை இந்த மருத்துவமனையாக தான் இருக்கும்.

அடுக்கம்பாறையில் அமைந்துள்ள அரசு வேலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதற்காக ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என அணைக்கட்டு எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளாா். தற்பொழுது அந்த கழிவுகளானது ஏரியில் கலக்கின்ற சூழல் நிலவுகிறது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.

குடியாத்தத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையானது இந்த பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அமைச்சா்.

பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு மருத்துவமனையைத் திறந்து வைத்து பேசினாா். நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் பி.செந்தில் குமாா், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம். கதிா்ஆனந்த், எம்எல்ஏக்கள்ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமலு விஜயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இயக்குநா் கே.சித்ரா, நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், மருத்துவம் மற்றும்ஊரக நலப்பணிகள் இயக்குநா் பி.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.