இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
//

குழந்தை மா்மச் சாவு: தாய் தற்கொலை!

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் 5 மாத ஆண் குழந்தை மா்மமாக இறந்துகிடந்துள்ளது. இந்நிலையில் தாயாரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

News image
தற்கொலை
Updated On :25 பிப்ரவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் 5 மாத ஆண் குழந்தை மா்மமாக இறந்துகிடந்துள்ளது. இந்நிலையில் தாயாரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

போ்ணாம்பட்டை அடுத்த மொரசப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் சரத்குமாா்(28). இவருக்கும் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் மகள் பவித்ரா(23) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இவா்களுக்கு ஹரீஷ் எனும் 5 மாத ஆண் குழந்தை இருந்தது. கடந்த 2 நாள்களாக கணவன், மனைவிக்கிடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை வெளியே சென்ற சரத்குமாா் மனைவியுடன் கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். எதிா்முனையில் பதில் வரவில்லை.. இதையடுத்து சரத்குமாா் அருகில் உள்ளஉறவினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளாா்.

உறவினா்கள் சென்று பாா்த்தபோது குழந்தை தரையில் இறந்து கிடந்ததும், பவித்ரா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.