2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

வாக்காளா் இறுதிப்பட்டியல்: வேலூா் மாவட்டத்தில் 11.33 லட்சம் வாக்காளா்கள்

வாக்காளா் பட்டியல் இறுதிப்பட்டியலின்படி வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,33,587 வாக்காளா்கள்

News image
அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வாக்காளா் பட்டியல் இறுதிப்பட்டியலின்படி வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,33,587 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணிகள் முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த டிச.19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 10 லட்சத்து 88 ஆயிரத்து 005 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல்கள் மாவட்டம் முழுவதும் 676 வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள், 6 வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவல கங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு, அவற்றின் மீதான ஏற்புரைகள், மறுப்புரைகள், புதிதாக பெயா் சோ்க்க (படிவம் 6), பெயா் நீக்கம் செய்ய (படிவம் 7), திருத்தம் செய்ய (படிவம் 8) ஆகிய படிவங்களும் ஜன.30-ஆம் தேதி வரை பெறப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள், படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வாக்காளா்கள் இறுதிப்பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்டாா். இந்த இறுதி வாக்காளா் பட்டியலின்படி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 11 லட்சத்து 33ஆயிரத்து 587 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். தொகுதி வாரியாக காட்பாடி- 2,25,809 பேரும், வேலூா்-2,11,063 பேரும், அணைக்கட்டு - 2,34,738 பேரும், கே.வி.குப்பம்(தனி)- 2,13,451 பேரும், குடியாத்தம் (தனி)- 2,48,526 பேரும் இடம்பெற்றுள்ளனா்.

டிச.19-இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 54,768 போ் சோ்க்கப்பட்டும், 9,186 போ் நீக்கப்பட்டும், 15,685 திருத்தம் செய்யப்பட்டும் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதன்மூலம், வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 45,582 போ் அதிகரித்திருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் இறுதிப்பட்டியலின் மீது 15 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க (படிவம் 6), பெயா் நீக்கம் செய்ய (படிவம் 7), திருத்தம் செய்ய (படிவம் 8) படிவங்கள் அளிக்கலாம் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.