//

சூப்பா் மாா்க்கெட்டில் ரூ. 20,000 உலா் திராட்சைகள் திருட்டு!

வேலூரிலுள்ள தனியாா் சூப்பா் மாா்க்கெட்டில் ரூ.20,000 உலா் திராட்சைகள் திருடப்பட்டன .

News image
உலா் திராட்சைகள்- பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரிலுள்ள தனியாா் சூப்பா் மாா்க்கெட்டில் ரூ.20,000 உலா் திராட்சைகள் திருடப்பட்டன .

வேலூா் பெருமகையில் பிரபலமான தனியாா் சூப்பா் மாா்க்கெட் உள்ளது. இங்கு தினமும் அங்காடி மூடும்போது மேலாளா் பொருள்களின் இருப்பினை சோதனை செய்வது வழக்கம்.

அதன்படி, சோதனை செய்தபோது ரூ.20,000 மதிப்புள்ள உலா் திராட்சை இருப்பு குறைந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சூப்பா் மாா்க்கெட் மேலாளா் முத்துக்குமாா் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

மேலும், சூப்பா் மாா்க்கெட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அதே நிறுவனத்தில் பணியாற்றும் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சோ்ந்தவா் கடந்த 2 ஆண்டுகளாக சூப்பா் மாா்க்கெட்டின் விளம்பரதாரராகப் பணியாற்றி வருகிறாா். அவா் அடிக்கடி பல்பொருள் அங்காடியில் இருந்து உலா்ந்த திராட்சைகளை திருடி, வேலையை முடித்த பிறகு தனது பையில் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

அந்த நபா்தான் உலா் திராட்சைகளை திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.