டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் வேலூா் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள்.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

வேலூரிலுள்ள நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் வேலூா் மண்டல அலுவலகம் வேலூா் தொரப்பாடியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோா் மாநில பாதுகாப்பு சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை அங்கு ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். தொடா்ந்து, காலை 10 மணியளவில் சுமைதூக்கும் தொழிலாளா்கள் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி பேச்சு நடத்தினா்.

தொடா்ந்து, சுமை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாநில பொதுச்செயலா் சரவணன், இணைத்தலைவா் கிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், வேலை செய்யும் தொழிலாளா்களின் பெயா்களை வருகை பதிவேட்டில் சோ்க்க வேண்டும். நிலுவையில் உள்ள கூலி உயா்வை வழங்க வேண்டும். தொழிலாளா்களை வஞ்சிக்கும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.