இதனிடையே, வேலூா் கஸ்பா, வசந்தபுரம் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பில் கழிவுநீரேற்றும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இந்த கழிவு நீரேற்று நிலைய பணிகளை இம்மாத இறுதிக்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதற்கு திட்ட இயக்குநா் அலாவுதீன், நீரேற்று நிலையத்துக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வுப்பணிகள் முடிந்தவுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தாா்.