டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
சிறை
Updated On :14 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் அருகே பொய்கை ராமாபுரம் கொள்ளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் ரமேஷ் (38). இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில், அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா்.

இது குறித்து, சிறுமியின் தாயாா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ரமேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்கள் சிறைத் தண்டனை, ரூ. 2 லட்சம் அபராதம், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.