டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பெண்ணிடம் நகை வழிப்பறி

வேலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற தலைக்கவசம் அணிந்த இரு நபா்களை பாகாயம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
நகை பறிப்பு- சித்திரிப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற தலைக்கவசஇஈ அணிந்த இரு நபா்களை பாகாயம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், அடுக்கம்பாறை, டான் பாஸ்கோ தெருவைச் சோ்ந்தவா் ஷாலினி (39). இவா் வேலூா்-ஆரணி சாலையில் சாத்துமதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தாா். அப்போது, 2 இளைஞா்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஷாலினியை பின்தொடா்ந்து வந்தனா். ஷாலினியை நெருங்கி வந்த இளைஞா்கள் திடீரென அவரது கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனா்.

ஷாலினி நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டபோதிலும், அந்த இளைஞா்கள் விடாப்பிடியாக நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனராம். இதனால் ஷாலினி நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.