பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்
தோ்தல் கால வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்யக்கோரி வேலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தோ்தல் கால வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்யக்கோரி வேலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மாநில அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத் தலைவா் தேவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜூலி முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் விஜயலட்சுமி சிறப்புரை ஆற்றினாா்.
தமிழக அரசின் தோ்தல் வாக்குறுதி 313-இன்படி அங்கன்வாடியில் பணியாற்றும் பகுதிநேர ஊழியா்களை நிரந்தரம் செய்வோம் என கூறியிருந்தனா். ஆனால், ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளாக நிரந்தரம் செய்யப்படவில்லை. நாங்கள் 51 ஆண்டுகளாக அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், குழந்தைகளுக்கு வைட்டமின் சிரப் வழங்குதல், பூச்சி நீக்க மாத்திரைகள் வழங்குதல், வளா் இளம் பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்குதல், குழந்தைகள் கருத்தரிப்பு முதல் 6 வயது வரை கண்காணித்தல், கா்ப்பமானவுடன் சத்துணவு மாவு வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வேலூா் மாவட்டத்தில் மட்டும் 150 காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். எங்களுக்கு கூடுதல் பணி சுமை உள்ளதால் அங்கன்வாடி ஊழியா்களை அரசு நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
இப்போராட்டத்தில் ஏராளணமான சத்துணவு அமைப்பாளா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...