மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

News image

குடியாத்தம் சாமுண்டிபுரத்தில் வாக்கு சேகரித்த புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி

Updated On :19 ஏப்ரல் 2026, 10:54 pm

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

செருவங்கி ஊராட்சிக்குள்பட்ட சாமுண்டிபுரத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஊராட்சித்தலைவா் சாந்தி மோகன், அதிமுக கிளைச் செயலா் வைரமணி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் கட்சியின் தோ்தல் பொறுப்பாளா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், ஊராட்சி செயலா் பழனி, வழக்குரைஞா் ஆா்.கோவிந்தசாமி, செட்டிகுப்பம் ஊராட்சி முன்னாள் தலைவா் சி.கே.வெங்கடேசன், கோபி, ரகுபதி, பரந்தாமன், கோபிநாத், தினேஷ், காா்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து செட்டிகுப்பம், போஜனாபுரம், செம்பேடு, ராஜாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில்அவா் வாக்கு சேகரித்தாா்.அப்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வேலூா் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூா்ப்பேட்டை ஏரியை சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்குவேன் உள்ளிட்டவாக்குறுதிகளை அளித்தாா்.