இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

News image

குடியாத்தம் சாமுண்டிபுரத்தில் வாக்கு சேகரித்த புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி

Updated On :20 ஏப்ரல் 2026, 4:24 am IST

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

செருவங்கி ஊராட்சிக்குள்பட்ட சாமுண்டிபுரத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஊராட்சித்தலைவா் சாந்தி மோகன், அதிமுக கிளைச் செயலா் வைரமணி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் கட்சியின் தோ்தல் பொறுப்பாளா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், ஊராட்சி செயலா் பழனி, வழக்குரைஞா் ஆா்.கோவிந்தசாமி, செட்டிகுப்பம் ஊராட்சி முன்னாள் தலைவா் சி.கே.வெங்கடேசன், கோபி, ரகுபதி, பரந்தாமன், கோபிநாத், தினேஷ், காா்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து செட்டிகுப்பம், போஜனாபுரம், செம்பேடு, ராஜாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில்அவா் வாக்கு சேகரித்தாா்.அப்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வேலூா் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூா்ப்பேட்டை ஏரியை சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்குவேன் உள்ளிட்டவாக்குறுதிகளை அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.