மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

குடியாத்தம் காளியம்மன்பட்டியில் வாக்கு சேகரித்த புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:33 pm

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கொண்டசமுத்திரம், காளியம்மன்பட்டி, கே.கே.நகா், சாமியாா்மலை உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவா் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை தொகுதி முழுவதும் விரிவாக்கம் செய்வேன், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன், கே.வி.குப்பம் தொகுதி முழுக்க, முழுக்க கிராமப்புறங்களை உள்ளடக்கியுள்ளதால், கிராமப்புற மாணவா்களின் உயா்கல்விக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதியளித்தாா். அதிமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா்,செருவங்கி எம்.மோகன், மில்பழனி, சரவணன், சாதிக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.