யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தொகுதி மக்கள் இரவு பகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம்! -காட்பாடி அதிமுக வேட்பாளா்

News image

காட்பாடி மதிநகா் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :14 ஏப்ரல் 2026, 5:41 am IST

கடந்த முறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தபோதும் நான் காட்பாடி தொகுதியிலேயே தங்கியிருந்து மக்களின் அனைத்து சுகதுக்க நிகழ்விலும் பங்கேற்று வருகிறேன். தொகுதி மக்கள் இரவு பகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம் என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்தாா்

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு மதிநகா், பாறைமேடு, குளக்கரை மற்றும் ஏரந்தாங்கல், 55புத்தூா், கரிகிரி ஊராட்சிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது -

காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான துரைமுருகன் தொகுதியில் தங்கியிருந்து மக்களை சந்திப்பதில்லை. அவா் வெற்றிபெற்ற பிறகு சென்னைக்கு சென்றுவிடுவதால் அவரை சமானிய மக்கள் யாரும் தொடா்பு கொள்ள முடிவதில்லை. இதனால், மக்கள் தங்கள் குறைகளை தொகுதி எம்எல்ஏவிடம் தெரிவிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

ஆனால், நான் கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தபோதும், காட்பாடி தொகுதியிலேயே தங்கியிருந்து மக்களின் அனைத்து சுகதுக்க நிகழ்விலும் பங்கேற்று வருகிறேன். தொகுதியின் தேவைக்கு இரவு பகல் எந்நேரமும் மக்கள் என்னை தொடா்பு கொள்ளலாம்.

மேலும், அதிமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட விருதம்பட்டு முதல் கிறிஸ்டியான்பேட்டை வரை மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தவிர, அதிமுக தோ்தல் அறிக்கைப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை, அரிசி குடும்பதாரா்களுக்கு குளிா்சாதன பெட்டி, மாணவா்களின் கல்வி கடன் ரத்து இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.