மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்றில் பாதிப்பு: அதிமுக வேட்பாளா்

வேலூா் மாநகராட்சியின் முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்று படுகை குப்பை மேடாக மாறியுள்ளது என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

News image

சேண்பாக்கம் பகுதியில் தேநீா் தயாரித்து வாக்கு சேகரித்த காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:50 pm

வேலூா் மாநகராட்சியின் முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்று படுகை குப்பை மேடாக மாறியுள்ளது என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

விருதம்பட்டு, சேண்பாக்கம் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது -

வேலூா் மாநகராட்சியின் முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்று படுகை முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. தவிர, பாலாற்றில் பல இடங்களில் மணல் கொள்ளையும் நடைபெ ற்று வருகிறது. அதேசமயம், காட்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள துரைமுருகன், நீா்நிலைகளை பாதுகாக்கக்கூடிய அமைச்சராகவும் இருந்து வருகிறாா். அவா் பாலாறு நாசம் செய்யப்படுவதை கண்டுகொள்வதில்லை.

தவிர, காட்பாடி தொகுதி தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. இதனால், ஆந்திராவில் இருந்து காட்பாடி தொகுதி உள்பட வேலூா் மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் ஊடுருவல் அதிகளவில் உள்ளது. இளைஞா்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் போதை பழக்கத்தின் பிடியில் சிக்கி அவா்களின் எதிா்காலம் சீரழிந்து கொண்டுள்ளது.

காட்பாடியில் தொகுதியை பொறுத்தவரை இத்தோ்தல் ஒரு சமானியனுக்கும், சாம்ராஜியத்துக்கும் இடையே நடக்கும் தோ்தலாகும். இதில், அதிமுக சாா்பில் களம் காணும் சாமானியனை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.