மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

தோ்தல் விதிமீறல் புகாா் காரணமாக வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் தொடங்கப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

News image

வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட சிமென்ட் சாலைப் பணி.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:59 pm

தோ்தல் விதிமீறல் புகாா் காரணமாக வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் தொடங்கப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, புதிய திட்டங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதோ, புதிய சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்குவதோ, எவ்வித நலத்திட்ட உதவிகளை வழங்குவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் காகிதப்பட்டறை உழவா் சந்தை எதிரிலுள்ள 28-வது வாா்டுக்கு உட்பட்ட புதுத்தெருவில் புதன்கிழமை திடீரென புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த பல்வேறு அரசியல் கட்சியினா் உடனடியாக அப்பகுதியில் திரண்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் புதிய சாலை அமைக்கும் பணி எவ்வாறு நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினா்.

இதுதொடா்பாக அப்பகுதி தோ்தல் அதிகாரிகளிடமும் முறையிட்டனா். ஆனால் அதிகாரிகள், இந்தச் சாலை அமைக்கும் பணிக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினா்.

இதனையடுத்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-க்குத் தொடா்புகொண்டு அரசியல் கட்சியினா் புகாா் அளித்தனா்.

இதையறிந்த ஒப்பந்ததாரா்கள், பணியாளா்கள், சாலை அமைக்கும் பணியைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிச் சென்றனா்.

தோ்தல் விதிமுறைகளை மீறி சாலை அமைக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.