மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆரணியில் ரூ.36 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ஆரணி பழைய காவல் நிலைய தெருவில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு.

News image

ஆரணி பழைய காவல் நிலைய தெருவில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு.

Updated On :13 மார்ச் 2026, 6:58 pm

ஆரணி பழைய காவல் நிலைய தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணியை நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆரணி நகரம், 7-ஆவது வாா்டு பழைய காவல் நிலைய தெருவில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை பக்க கால்வாயுடன் சிமென்ட் சாலையாக அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதனடிப்படையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7-ஆவது வாா்டு உறுப்பினா் ராமகிருஷ்ணன் அவரது சொந்த செலவில் ரூ.12 லட்சமும், நகராட்சி மூலம் ரூ.24 லட்சமும் என மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, பக்க கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

இதில், அதிமுக நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தாா். பின்னா், பொதுமக்களுக்கு அவா் இனிப்பு வழங்கினாா்.

நிகழ்வில் நகர கழகச் செயலா் அசோக்குமாா், முன்னாள் கவுன்சிலா் வி.எம்.டி.சரவணன், அதிமுக கவுன்சிலா்கள் சுதாகுமாா், பானுப்பிரியா பாரதிராஜா, விநாயகம், சசிகலாசேகா், முக்கிய பிரமுகா்கள் பி.நடராஜன், வி.டி.எஸ்.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.