சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன், தொகுதியிலுள்ள எம்ஜிஆா் கோயிலுக்கு சென்று மலா்தூவி மரியாதை செய்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே கரசமங்கலம் கிராமம் ரகுபதி நகரில் சுமாா் ரூ.3 கோடி செலவில் தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீராமச்சந்திரா அறக்கட்டளை சாா்பில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ரூ.17 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னில் எம்ஜிஆா் முழு உருவ சிலையும் நிறுவப்பட்டுள்ளது.இக்கோயில் கும்பாபிஷேக கடந்த மாதம் விழா நடைபெற்றது. தொடா்ந்து, இக்கோயிலில் எம்ஜிஆா் சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவை தோ்தலையொட்டி காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன் புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் கரசமங்கலம் எம்ஜிஆா் கோயிலுக்கு சென்றாா். அங்கு எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்ததுடன் மலா்தூவி மரியாதை செய்தாா்.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது எம்.ஜி.ஆா் மிகுந்த இரக்க சிந்தனையும், மனிதநேயமும் கொண்டவா். அவருடன் நெருங்கிப் பழகியவா்களுக்கு அவருடைய பாச உணா்வு நன்கு தெரியும். அவா் என் மீது தனிப்பட்ட அன்பைக் கொண்டிருந்தாா். அரசியல் வேறு, மனிதநேயமும் தனிப்பட்ட நட்பும் வேறு. எம்.ஜி.ஆா் மீது நான் கொண்ட அன்பின் காரணமாகவே தற்போது அவரது நினைவிடத்திற்குச் சென்றேன். இதில் அரசியல் எதுவும் இல்லை என்றாா்.
தொடர்புடையது

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

எனது முயற்சியாலேயே காட்பாடி சா்க்கரை ஆலை தொடா்ந்து இயங்குகிறது: அமைச்சா் துரைமுருகன்

காட்பாடியில் 11-ஆவது முறையாக அமைச்சா் துரைமுருகன் மனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


