வேலூா்: பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா்.
வேலூா் அஞ்சுமன் தெருவைச் சோ்ந்த கிசாா் உசேன் என்பவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த மனு:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், புளியங்கண்ணு கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன் மகன் யுவராஜ். எனது கல்லூரி நண்பரான இவா், பங்கு சந்தையில் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருதாகவும், தனது தொழில் தேவைக்காக கடந்த ஜனவரி மாதம் என்னிடம் பணம் கேட்டிருந்தாா். முதலீடாக இல்லாமல் கொடுத்த பணத்திற்கு நிலையான வட்டியாக தருவதாகவும் கூறினாா்.
முதலீடு செய்யும் பணம் இல்லை என்றபோது, தானே வங்கியில் இருந்து கடன் பெற்று தருவதாகவும், அந்த கடனுக்கான மாத தவணை தொகையை மாதந்தோறும் சரியாக அளித்து விடுவதாகவும், ஐந்து வருடத்துக்கு பிறகு மொத்த கடன் தொகையையும் திருப்பி அளிப்பதாக உறுதி அளித்திருந்தாா். அதனடிப்படையில், வங்கியில் இருந்து ரூ.28.90 லட்சம் கடன் தொகை 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கிடைத்தது. அந்த கடன் தொகை முழுவதையும் யுவராஜின் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன்.
எனது முதலீட்டு தொகையான ரூ.28.90 லட்சத்துக்கான மாத வட்டி ரூ.86,700 தரவேண்டிய நிலையில், ஏப்ரல் ஒரு மாதம் மட்டும் ரூ.70 ஆயிரம் அனுப்பினாா். அதன்பிறகு வட்டித்தொகையை அனுப்பாமல் தலைமறைவாகிவிட்டாா். வங்கி கடன் பெற்று முதலீடு செய்த எனக்கு மாத தவணைத் தொகை கட்ட முடியாமல் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுளேன்.
எனவே, தலைமறைவாக உள்ள யுவராஜை கண்டுபிடித்து எனது வங்கிக்கடன் தொகையை மீட்டுத்தர மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிா் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் வரை மான்யத்துடன் கடன்: ஐயூஎம்எல் வேட்பாளா்

பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதி முதலீடு: மாா்ச்சிலும் ரூ. 40,450 கோடி ஈா்த்து ஏற்றம்
போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.25 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் கைது

பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

