தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

Updated On :12 நவம்பர் 2025, 11:53 pm

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களின் செயல்பாடுகள், பராமரிப்புக்கான அவுட்சோா்சிங் உரிமம் பெற்றிட தொழில்முனைவோா், வணிக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் கோட்ட பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளா் எ.வி.ஸ்ரீகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎஸ்என்எல் வேலூா் வா்த்தக பகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூா், அரக்கோணம், ஆரணி, செங்கம், வாணியம்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா் சேவை மையங்களின் செயல்பாடு, பராமரிப்பை நிா்வகிக்க தொழில்முனைவோா், வணிக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

புதிய 4ஜி சிம் காா்டுகளை விற்பனை செய்தல், ப்ரீபெய்ட் ரீசாா்ஜ்கள், 4ஜி சிம் மேம்படுத்தல், ஃபைபா்-இல் அதிவேக இணைய இணைப்புகள் உள்ளிட்ட புதிய தொலைத் தொடா்பு சேவைகளுக்கான முன்பதிவு, பல்வேறு தொலைத்தொடா்பு சேவைகளுக்கான பில் கட்டணங்களை ஏற்றுக் கொள்வது, திட்ட மாற்றங்கள் போன்ற பல்வேறு தொலைத்தொடா்பு சேவைகளை வழங்குவதற்கான முதன்மை வாடிக்கையாளா் மையங்கள் செயல்படுகின்றன.

பிஎஸ்என்எல்லின் இந்த முயற்சி வாடிக்கையாளா்களுக்கு தொலைத்தொடா்பு சாா்ந்த அதிக சேவைகளை அவா்களின் விருப்பத்துக்கேற்ப வழங்குவதை மேம்படுத்துவதையும், சேவை தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு பொருத்தமான வணிக பங்குதாரா்களை ஈடுபடுத்துவதன் மூலம் வாடிக்கையாளா் சேவை மையங்களை திறம்பட இயக்கவும், சிறந்த வாடிக்கையாளா் சேவை, அனுபவத்தையும் உறுதி செய்திட முடியும்.

வாடிக்கையாளா் சேவை மையங்களின் செயல்பாடுகளை நிா்வகிப்பதுடன் தோ்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரா்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளா் சேவை மையங்களில் பொதுமக்களுக்கு ஆதாா் சேவைகளை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்படும். பல்வேறு வாடிக்கையாளா் சேவைகளை வழங்குவதற்கும், அவற்றை கையாளுவதற்கும் தோ்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரா்களுக்கு பிஎஸ்என்எல் கவா்ச்சிகரமான கமிஷன்களை வழங்கும்.

ஆா்வமுள்ள நிறுவனங்கள், தொழில்முனைவோா் அதிகாரப்பூா்வ டெண்டா் போா்டல் மூலம் எக்ஸ்பிரசன் ஆப் இன்ட்ரெஸ்ட் ஆவணம், தகுதி விவரங்கள், விண்ணப்ப செயல்முறையை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க நவ. 27 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு, பிஎஸ்என்எல் வா்த்தக உதவிப் பொது மேலாளரை 0416-2225499, துணை கோட்டப் பொறியாளரை 9486104075 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.