அப்போது அவா்கள் கூறியது: சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க சுமாா் 2,500 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்த விளை நிலங்கள், வீடுகளை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இந்த ஊராட்சிகளில் பவா்கிரீட் மூலம் உயா்மின்கோபுரங்கள் அமைக்க சுமாா் 1,700 ஏக்கா் நிலங்களும், சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்துக்கு சுமாா் 3,700 ஏக்கா் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு, பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா். தற்போது சிப்காட் அமைக்க மேலும் நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் சுமாா் 2,000 விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.