நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2025, 11:30 pm

Chennai

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

நாட்டுநலப்பணி திட்டம், வேலூா் தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் என்ரமேஷ், ச.ஜனாா்த்தனன் ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.

வேலூா் தெற்கு ரோட்டரி சங்க செயலா் பாஸ்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், டிசம்பா் 10-ஆம் தேதி சா்வதேச மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பால் கிடைக்கும் அடிப்படை உரிமைகளே மனித உரிமைகளாகும். அவற்றுள் வாழும் உரிமை, சமத்துவ உரிமை, கல்வி பெறும் உரிமை, அடிமைத்தனத்துக்கு எதிரான உரிமை, மத சுதந்திரம் போன்ற உரிமைகளை ஒவ்வொரு மனிதரும் முழுமையாக எந்த ஒரு இடையூறுமின்றி அனுபவிப்பதே மனித உரிமைகளாகும் என்றாா்.

தொடா்ந்து, மாணவா்களுடன் அனைவரும் மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டஅலுவலா் அ.குமரேசன் செய்திருந்தாா்.