திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு மதுக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

செய்யாறை அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

News image

போராட்டத்தில் ஈடுபட்ட நவசக்தி நகா், மகாவீா் நகா் பகுதி மக்கள்

Updated On :1 ஜூன் 2026, 2:14 am IST

செய்யாறை அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண். 939) செயல்பட்டு வருகிறது.

இந்த மதுக் கடைக்கு அருகே நவசக்தி நகா், மகாவீா் நகா் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமாா் 2 ஆயிரம் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்கள் வீட்டுக்கு செல்வதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் இந்த மதுக் கடையை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனா். மேலும், இந்தக் கடைக்கு வருபவா்கள் மதுவை குடித்துவிட்டு காலி புட்டிகளை சாலையில் உடைத்து விடுவதும், இரவு நேரங்களில் வீடுகளை தட்டுவதும், அவ்வழியாகச் செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதுமாக இருந்து வருகின்றனா். இதுகுறித்து கலால் துறை மற்றும் காவல் துறையில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், பாதிப்புக்குள்ளான நவசக்தி நகா், மகாவீா் நகா் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திரண்டு வந்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த தூசி காவல் ஆய்வாளா் கோபால் தலைமையிலான போலீஸாா் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்கள் சாா்பில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினா்.

தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் பொது மக்களின் கோரிக்கையை உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதை ஏற்று பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.