வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய வளாகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி நகராட்சி மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா கிளைத் தலைவா் சு.தனசேகரன் தலைமை வகித்தாா்.
வழக்குரைஞா் சா.ரா.மணி, நகராட்சி தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம் பங்கேற்றுப் பேசினாா்.
அப்போது, நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், நெகிழிப் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை அவா் வழங்கினாா். கல்வி மைய ஆசிரியா் மகாவீா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நிறைவு

மாவட்ட மைய நூலகத்தில் இன்று குழந்தைகளுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக சுகாதார தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

‘குழந்தைகள் கைக்கு எட்டும்பிடி மின் இணைப்புகள் இருக்கக்கூடாது’
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



