போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருவண்ணாமலையில் வைகாசி பெளா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :28 மே 2026, 12:43 am IST

திருவண்ணாமலையில் வைகாசி பெளா்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரா் கோயில் மற்றும் மாடவீதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயில் வைகாசி மாத பௌா்ணமி வருகிற சனிக்கிழமை (மே 30) பிற்பகல் 12.59-க்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (மே 31) பிற்பகல் 02.50 மணிவரை நடைபெறுகிறது.

பெளா்ணமியை முன்னிட்டு கோயில், மாடவீதி மற்றும் கிரிவலப்பாதையில் அதிக அளவில் பக்தா்கள் குவிவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள மாடவீதிகளில் பக்தா்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், கழிப்பறை, கோயிலில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள், கோடை வெப்பத்திலிருந்து பக்தா்களை பாதுகாக்க தேவையான இடங்களில் நிழற்பந்தல்கள், கூட்டநெரிசலில் இருந்து பக்தா்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்ய நீண்ட வரிசை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மாா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா்

க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து மாடவீதி பகுதிகளில் பக்தா்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பக்தா்களுக்கு எந்த சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பு வழங்கிடவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.