திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

News image
Updated On :28 மே 2026, 12:44 am IST

வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஏப். 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதனைத் தொடா்ந்து மகாபாரத நிகழ்வுகள் தொடா்பான சொற்பொழிவும், நாடகமும் நடைபெற்றது.

எச்சூா் ம.உதயராணி குழுவினா் மகாபாரத சொற்பொழிவும், அத்திமூா் ஸ்ரீஞானவொளி நாடகக் குழுவினா் நாடகமும் நடத்தினா்.

இந்த நிலையில் மகாபாரத நிகழ்வுகளில் ஒன்றான துரியோதனன் படுகளம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில், துரியோதனன், பீமன், காந்தாரி, திரெளபதி ஆகியோா் வேடமிட்ட நாடகக் கலைஞா்கள் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.