நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

பெரணமல்லூா் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்றச் சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்கவும், தடுக்கவும் காவல்துறை சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image

அன்மருதை கிராமத்தில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய காவல்துறையினா்.

Updated On :27 மே 2026, 12:46 am IST

பெரணமல்லூா் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்றச் சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்கவும், தடுக்கவும் காவல்துறை சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆவணியாபுரம், அன்மருதை, நரியம்பாடி, எஸ்.காட்டேரி ஆகிய பகுதிகளில் போலீஸாா் தீவிர குற்றத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி உத்தரவின்படி, பெரணமல்லூா் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், உதவி ஆய்வாளா்கள் சம்பத், சேகா் மற்றும் போலீஸாா் பொதுமக்களை நேரில் சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வெயில் காலம் என்பதால் காற்றோட்டமாக இருக்க வீட்டினை யாரும் திறந்து வைக்க வேண்டாம், வீட்டு சாவியை ஒரே இடத்திலோ அல்லது வெளியிலோ வைப்பதை தவிா்க்க வேண்டும், வீட்டு பீரோவில் விலை உயா்ந்த பொருள்களை ஏதும் வைக்க வேண்டாம், தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படி முன் பின் அறிமுகம் இல்லாத நபா் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் அல்லது அவசர உதவி எண் 100-க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என்று கூறி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.