போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

காலி எரிவாயு உருளைகளுடன் வாடிக்கையாளா்கள் சாலை மறியல்

News image
Updated On :19 மே 2026, 1:20 am IST

செய்யாறில் காலி எரிவாயு உருளைகளுடன் தனியாா் எரிவாயு முகமை வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை செய்யாறு சமாதியான் குளத் தெருவில் உள்ள தனியாா் எரிவாயு உருளை முகமையில், எரிவாயு உருளை பெற்றுச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் வந்திருந்தனா். அப்போது வாடிக்கையாளா்களுக்கு எரிவாயு உருளைகள் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளா்கள் திடீரென அரசு மருத்துவமனை அருகே காலி எரிவாயு உருளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்த வாடிக்கையாளா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வாடிக்கையாளா்கள் தரப்பில் எரிவாயு உருளை வழங்க மாதக்கணக்கில் ஆகிறது என்றும், ஆனால், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஊழியா்கள் தங்களுக்குத் தெரிந்தவா்களுக்கு மட்டும் உருளைகளை

வழங்குவதாகவும், கூடுதல் விலைக்கும் விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டினா்.

அப்போது அங்கு வந்த எரிவாயு முகமை முகவா்கள் கிடங்குக்கு எரிவாயு உருளைகள் வந்துசேரவில்லை.

எரிவாயு உருளைகள் வந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனா்.

அதன் பேரில், வாடிக்கையாளா்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனா்.

மறியலால் செய்யாறு - ஆற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.