செய்யாறில் காலி எரிவாயு உருளைகளுடன் தனியாா் எரிவாயு முகமை வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை செய்யாறு சமாதியான் குளத் தெருவில் உள்ள தனியாா் எரிவாயு உருளை முகமையில், எரிவாயு உருளை பெற்றுச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் வந்திருந்தனா். அப்போது வாடிக்கையாளா்களுக்கு எரிவாயு உருளைகள் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளா்கள் திடீரென அரசு மருத்துவமனை அருகே காலி எரிவாயு உருளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்த வாடிக்கையாளா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, வாடிக்கையாளா்கள் தரப்பில் எரிவாயு உருளை வழங்க மாதக்கணக்கில் ஆகிறது என்றும், ஆனால், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஊழியா்கள் தங்களுக்குத் தெரிந்தவா்களுக்கு மட்டும் உருளைகளை
வழங்குவதாகவும், கூடுதல் விலைக்கும் விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டினா்.
அப்போது அங்கு வந்த எரிவாயு முகமை முகவா்கள் கிடங்குக்கு எரிவாயு உருளைகள் வந்துசேரவில்லை.
எரிவாயு உருளைகள் வந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனா்.
அதன் பேரில், வாடிக்கையாளா்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனா்.
மறியலால் செய்யாறு - ஆற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

அரசுப் பள்ளியில் எரிவாயு உருளைகள் திருட்டு

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

எரிவாயு உருளை விலை அதிகரிப்பால் விறகு அடுப்புக்கு மாறி வரும் உணவகங்கள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



