வந்தவாசி அருகே 4 சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம். இவா் புதன்கிழமை காலை நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றுள்ளாா்.
அப்போது, நிலத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறிய மின்மாற்றியை மா்ம நபா்கள் கழற்றி உடைத்து அதிலிருந்த செப்புக் கம்பிகளை திருடிச் சென்றது இவருக்கு தெரியவந்தது.
அந்தப் பகுதியில் இருந்த மேலும் 3 சிறிய மின்மாற்றிகளையும் கழற்றி உடைத்து செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். திருடியது போக தேவையில்லாத பொருள்களை அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசிச் சென்றுள்ளனா்.
தகவலறிந்த ஓசூா் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
வீட்டில் 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



