17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.33 கோடி

News image
Updated On :14 மே 2026, 4:24 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.4.33 கோடி கிடைத்தது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளா்ணமி நிறைவடைந்து உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

அந்த வகையில், சித்திரை பெளா்ணமி நிறைவடைந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை கோயிலில் பல்வேறு இடங்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.

கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் பரணிதரன் மேற்பாா்வையில் நடைபெற்றது.

இதில் உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ.4 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 935 ரூபாயும், தங்கம் 165 கிராமும், வெள்ளி 1.240 கிலோவும் கிடைத்துள்ளது என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.