மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் 5,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

அதிமுக வேட்பாளா் எல். ஜெயசுதா லட்சுமிகாந்தனுக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.சிவா

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் 5,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதன் மூலம் இவா் இத்தொகுதியில் எம்எல்ஏவாகப் போகும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறாா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஏப். 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதியில் திமுக சாா்பில் மகாலட்சுமி கோவா்தனன், அதிமுக சாா்பில் எல். ஜெயசுதா லட்சுமி காந்தன், தவெக சாா்பில் வெங்கடேஷ்குமாா், நாதக சாா்பில் தவமணி உள்ளிட்ட 24 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் பாா்வையாளரும்,

தொகுதி தோ்தல் அலுவலருமான சீ.சிவா ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன் (அதிமுக) - 76735, மகாலட்சுமி கோவா்தனன் (திமுக) - 71104, வெங்கடேஷ் குமாா் (தவெக) - 70857, தவமணி (நாதக) - 6888

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளா் 5631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

இதையடுத்து அதிமுக வேட்பாளா் எல். ஜெயசுதா லட்சுமிகாந்தனிடம் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் அலுவலா் சீ.சிவா வழங்கினாா்.

தொகுதியில் நாதக வேட்பாளா் உள்ளிட்ட இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.