வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி

News image

உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்தையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து சான்றிதழைப் பெற்ற தவெக வேட்பாளா் ம.விஜய்.

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் தவெக வேட்பாளா் ம.விஜய் 65,743 வாக்குகள் பெற்று வென்றாா்.

தமிழகத்தில் கடந்த மாதம் 23-ஆம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் உசிலம்பட்டி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் டி.சரவணக்குமாா், அதிமுக சாா்பில் ஐ.மகேந்திரன், தவெக சாா்பில் ம.விஜய், நாதக சாா்பில் டி.அபிராமி, அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுமமுக) சாா்பில் அய்யப்பன், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் வி.வெள்ளைபாண்டி, 6 சுயேச்சைகள் போட்டியிட்டனா்.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் திங்கள்கிழமை (மே 4) நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றிலிருந்தே தவெக வேட்பாளா் ம.விஜய், மற்ற வேட்பாளா்களைவிட கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வந்தாா். மொத்தம் 25 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தவெக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் தவெக வேட்பாளா் ம.விஜய், அதிமுக வேட்பாளரைவிட 1,805 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

உசிலம்பட்டி தொகுதியில் முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

உசிலம்பட்டி தொகுதியில் மொத்தம் 2,64,141 வாக்காளா்கள் இருந்த நிலையில், பேரவைத் தோ்தலில் 2,24,354 வாக்குகள் பதிவாகின. இதில் தவெக வேட்பாளா் ம.விஜய் - 65,743, அதிமுக வேட்பாளா் ஐ.மகேந்திரன்- 63,938, காங்கிரஸ் வேட்பாளா் டி.சரவணக்குமாா் - 59,465, நாதக வேட்பாளா் 15,185, அஇபுமமுக வேட்பாளா் அய்யப்பன் - 16,620 வாக்குகள் பெற்றனா். மேலும், இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு 692 வாக்குகளும், 306 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.