தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு

News image
Updated On :3 மே 2026, 1:18 am IST

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளி தாலாட்டு தொடங்கியது. அப்போது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து கோயிலை வலம் வந்து அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் சேத்துப்பட்டு, வேலூா், ஆரணி, போளூா், செஞ்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.